


விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் பதிவாகியுள்ளது. அவரைப்பற்றி ஆய்வு செய்துள்ள கடலூர் ஆசிரியை விஜயலட்சுமி இக்குறிப்புகளை சட்டமன்ற அலுவலகத்தில் பெற்றுள்ளார். அவர் அக்குறிப்புகளை அஞ்சலையம்மாளின் மகன் திரு ஜெயவீரன் அவர்களிடம் கொடுத்திருந்தார் நான் திரு. ஜெயவீரன் அவர்களிடமிருந்து பெற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பட வடிவில் வெளியிடுகிறேன். இதற்கு உதவியவர் அஞ்சலையம்மாளின் மகன் வழிப் பெயரன் திரு. அருணகிரி இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றிகூற கடமைப் பட்டுள்ளேன்.