***
சென்னை சைக்கிள் குழுவினரின் தொலைவு சவாலில் பங்கேற்பதற்காக மருத்துவர் பார்த்திபன் அழைப்பு விடுத்தார். அப்போதுதான் இப்படி ஒரு குழு (WCCG) இருப்பது எனக்கு தெரியவந்தது. விதிமுறைகளைக் கேட்ட போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. ஐந்து பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்படி எனில் ஒருவர் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் தான் சரியாக இருக்கும். என்னால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்ட முடியாது என்று கூறி மறுத்து விட்டேன். நீங்கள் 500 கிலோ மீட்டர் ஓட்டினால் போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து 4500 கிலோமீட்டர் ஓட்டிக் கொள்கிறோம், ஒரு குழுவுக்கு ஐந்து பேர் தேவை நான்கு பேர் தயாராக இருக்கிறோம் ஐந்தாவதாக நீங்களும் இணைந்தால் பதிவு செய்யலாம் என்றார். (மருத்துவர் நவீன், மருத்துவர் விஜய், திரு. சுதாகர் ஆகியோர் இக்குழுவில் உள்ளதால் நானும் சம்மதித்தேன். நவீன் சுதாகர் இருவரும் சைக்கிள் பேய்கள் 100 கி.மீ.க்கு குறைவாக ஓட்டுவதே இல்லை சுதாகர் சார் 600 கி.மீ. பி.ஆர்.எம். செல்கிறார் எனவே இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று ஆசையைத் தூண்டினார்) பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் இன்று மாலை ஆறு மணியுடன் கால அவகாசம் முடிவடைகிறது என்றார். அந்த நேரத்தில் எனது கைபேசி முடங்கிப் போனது. மருத்துவர் விஜயோ துபாய் விமான நிலையத்தில் இருக்கிறார். அவருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை அழைத்து சலித்து எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போது தான் என் கைபேசிக்கு உயிர் வந்தது. மணியோ ஏழு ஆகியிருந்தது. பதிவு செய்வதற்காக காலக்கெடு முடிந்து விட்டது. எங்களுக்காக மருத்துவர் நவீன் சென்னையில் பேசி கால அவகாசத்தை நீட்டிக்கச் செய்திருந்தார். என்னால் இணைய வழியில் தொகையை செலுத்த இயலவில்லை எனவே பார்த்திபன் எனக்காக தொகையை செலுத்தினார். இப்படியாக அந்த சவாலில் பதிவு செய்வது மிக பெரிய சாவலாக இருந்தது எங்களுக்கு.
ஒரு வழியாக டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் குழு டைட்டன்ஸ் சவாலில் இணைக்கப்பட்டது.
24 நாட்களில் 2868 கி.மீ. தான் ஓட்டினோம் இன்னும் ஆறு நாட்களில் 2132 கி.மீ. ஓட்ட வேண்டும். மாதம் முடிந்தது வாட்சப் குழுவில் நாங்கள் ஓட்டிய தூரத்தை மருத்துவர் விஜய் இப்படி பதிவுசெய்தார்.
Vijay 1066
Parthiban sir. 1002
Sudhakar sir 782
Rathna pugazh sir. 705
Naveen sir 669
Total 4225 / 5000
ஒரு மாதம் முடிந்தது நாங்கள் நினைத்தபடி சவாலை முடிக்க இயலவில்லை. இருந்தாலும் 4000 கி.மீ.க்கு மேல் ஓட்டியதால் டைட்டன்ஸ் க்கு பதில் வைக்கிங் வகையில் நாம் வருவோம் என்று ஆறுதல் கூறினார் பார்த்திபன். ஒரு வழியாக சென்னையிலிருந்து எங்கள் குழுவினருக்கான மெடல் களை பெற்றோம். இன்று குழுவினர் அனைவரும் வடலூரில் சந்தித்து பதக்கங்களை பகிர்ந்து கொண்டோம். மருத்துவர் நவீன் புதுவையில் இருந்தும் திரு. சுதாகர் கடலூரில் இருந்தும் மிதிவண்டியில்தான் வந்தனர் நாங்கள் மூவரும் வடலூர் சென்றோம். மீண்டும் அவர்களை விருத்தாசலம் அழைத்து வந்து காலை சிற்றுண்டியை முடித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.
PC: Dr. Navin , Dr. Parthiban Allimuthu
See Insights