தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, December 22, 2009

புதுவையில் ஒளி ஓவியப் பயிலரங்கு






புதுவை ஒளிப்படக்கலைஞர்கள் இணைந்து இளம்
ஒளி ஓவியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு
ஒன்றினை எக்சிகியூடிவ் இன் விடுதியில் ஏற்பாடு
செய்திருந்தனர். ஒளிப்படக் கலைஞர்கள்
முருகன், சரவணன், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் மிகச்சிறப்பாக
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். புகழ் பெற்ற ஒளிப்படக்கலைஞர்
நெய்வேலி ஜான்பாஸ்கோ டிஜிடல் கேமிராவில் தெரிந்துகொள்ள வேண்டிய
அடிப்படை நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்
ஒளி ஓவியர் மோகன் படத்தை ஒளியால் மெருகூட்டுவதற்கான
நுட்பங்களைப் பயிற்றுவித்தார். ஒளிப்படக்கலையில் 40 ஆண்டு
அனுபவமுடைய மூத்த கலைஞர் ஆசிரியர் விவேகானந்தன்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஒளிப்படக் கலைஞர்கள்
25 பேர் கலந்துகொண்டனர். நானும் பார்வையாளனாகக் கலந்துகொண்டு
படம் பிடிப்பதற்கான சில நுட்பங்களைக் கற்று வந்தேன்.
ஈடுபாட்டு உணர்வோடு அனவரும் பங்கேற்று பயிலரங்கை வெற்றியடையச்
செய்தனர். புதுச்சேரி ஒளி ஓவிர்கள் மன்றம் என்ற பெயரில் தொடர்ந்து இயங்குவது
என முடிவெடுக்கப் பட்டது. ஒளிப்படப்போட்டிகள் நடத்துவது என்றும் முடிவுசெய்துள்ளனர்.
அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment