தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, July 15, 2010

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய மஞ்சணத்தி நூல் திறனாய்வு

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய மஞ்சணத்தி நூல் திறனாய்வு












திரனாய்வாளர்கள்

பாகியராஜ்
மனுஷ்யபுத்திரன்
கலாப்ரியா
ரவிக்குமார்
பிரபஞ்சன்

வரவேற்பு :இரத்தினபுகழேந்தி

தலைமை : இமையம்

நன்றியுரை: ராமு

அமைப்பு : திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம்
18.07.2010
ஞாயிறு மாலை 5.30
மக்கள் மன்றம்

குறிப்பு: மணற்கேணி இரு மாத இதழ் வெளியிடப்படுகிறது.

அண்ணன் ராசு அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி

சிந்தனைச்சிற்பி அண்ணன் ராசு அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி
வழ்க்கறிஞர் அருள்மொழி சிறப்புரை
வானொலித்திடல்
17.7.2010 மாலை 6.00 மணி
அனைவரும் வருக








Saturday, July 3, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு







உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை உற்றுநோக்கியதில் எனக்குத்தோன்றிய நிறை குறைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்

மாநாட்டின் நிறைகள்
இதுவரை நடைபெற்ற மாநாடுகளைக் காட்டிலும் மக்கள் திரள் மிகவும் அதிகம். நீண்ட வரிசையில் காத்திருந்து கண்காட்சியைக் கண்டுகளித்தனர். இனியவை நாற்பது சங்க இலக்கியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தியது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 வகை மலர்கள் படங்களுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. சிந்துவெளி கண்காட்சியை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தினர் காட்சிப்படுத்திய பாங்கு. பேராளர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பாராட்டும்படி அமைந்தது. அரங்குகள் அனைத்தும் அதி நவீன வசதிகளுடன் அமைந்திருந்தன சங்ககாலப் புலவர்களின் பெயரில் நவீன ஓவியங்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டின் குறைகள்
ஆய்வுக் கட்டுரைகள் சரியாக தேர்வு செய்யப்படவில்லை. மாநாட்டு மலரில் இளம் படைப்பாளர்களுக்கு பேதிய இடமளிக்கவில்லை. நவீன இலக்கியவாதிகள் அழைக்கப்படவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான உறுப்படியான அறிவிப்புகள் இல்லை. முக்கியமான அயல்நாட்டு அறிஞர்களின் (ஜார்ஜ்ஹார்ட், அஸ்கோபர்போலா) கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை. நுட்பமான ஆய்வுகள் மிகவும் குறைவான அளவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியின் பழம்பெருமை பேசுவதற்கு அளித்த முக்கியத்துவம் எதிர்கால வளர்ச்சி குறித்து பேசுவதற்கு அளிக்கப்படவில்லை.

மலேசிய சுற்றுப்பயணம்







மலேசியாவில் சிங்கப்பூர் அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை திருடர்கள் பயம் அதிகம் இரவில் பெண்கள் நகை அணிந்து செல்வது பாதுகாப்பற்றது என எச்சரித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலியைப் பறித்துவிடுவார்களாம். டைநாஸ்டி விடுதியில் 27 ஆவது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்லவே அச்சமாக இருந்தது. முதல் நாள் நகரச்சுற்றுலாவில் பத்துமலை முருகன் கோயில் சென்றோம் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பாததனால் நான் சென்ற பேருந்தை தவற விட்டு மற்றொரு பேருந்தில் செல்ல நேர்ந்ததை மறக்க இயலாது. மலேசிய விடுதலைக்குப் போரிட்டு உயிர்நீத்த ஈகியர் சிலைகளைப்பார்த்தோம். இரட்டை கோபுரம், சாக்லேட் தொழிற்சாலை போன்ற இடங்களைப்பார்த்தோம். மறு நாள் ஜெண்டிங் கற்பனைப் பூங்கா சென்றோம் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கம்பி வடத்தில் சென்றோம் கீழே பார்க்கக் குலை நடுங்கியது. உலகின் மிகப்பெரிய கம்பிவடப் போக்குவரத்து இது என்றும் கின்னஸில் இடம்பெற்றுள்ளது என்றும் எங்கள் வழிகாட்டி திருமதி சாரா கூறினார். இங்கு சாராவைப்பற்றி சொல்லியாக வேண்டும் சீன இனத்தில் பிறந்து மலாயில் வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர் இந்தியரை மணத்துகொண்டவர் (அவரும் எங்கள் குழுவினருக்கு வழிகாட்டியாக வந்தவர்) பேருந்து நிற்குமிடத்திலெல்லாம் இறங்கியதும் சிகரெட்டைப் பற்றவைத்துவிடுவார் சாரா. பெண்கள் சிகரெட் பிடிப்பதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். எனக்கு சாரா என்ற பெயரைக் கேட்டதும் பணியிடைப் பயிற்சியில் பாடிய 'சாரா.. சாரா மை டார்லிங் டோண்ட் யு க்ரை...' என்ற பாடல்தான் நினைவுக்கு வர அவரிடம் பாடிக்காட்டினேன் புன்னகையுடன் ரசித்துக் கேட்டார்.
ஜெண்டிங்கில் அனைத்து வித பொழுதுபோக்குகளும் அமைந்திருந்தது. அவ்வளவாக அதில் நாட்டமின்மையால் நண்பர்களோடு சுற்றித்திரிந்தோம். மாலை வேளைகளில் மலேசியாவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இயலவில்லை. இத்தனைக்கும் உலங்கு வானூர்தியில் போக்குவரத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறார்களாம். ஒரு நாள் இரவு வீட்டுக்கு தொலைபேசுவதற்காக ஈப்போ சாலையில் ( மலாய் மொழியில் சாலையை ஜலாங் என்கிறார்கள்) இரவு ஒன்பது மணிக்குச் சென்றோம் நானும் நண்பர் செல்வினும் அங்கு ஒரு உணவு விடுதியின் முன்புறம் வீதி ஓரத்தில் அமர்ந்து இரண்டு நடுத்தர வயது பெண்கள் (குட்டைப்பாவாடை அணிந்திருத்தனர்) மது அருந்திக்கொண்டு சிகரெட் பிடித்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர் இது போன்ற காட்சிகள் எதையும் சிங்கப்பூரில் பார்க்க முடியவில்லை. தூய்மையைப் பேணுவதிலும் சிங்கப்பூர் அளவுக்கு மலேசியா இல்லை. நம் தமிழர்கள் பலர் மலேசியாவில் அதுவும் கோலாலம்பூரில் கடை வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒரு வழியாக மலேசிய சுற்றுப்பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு 23.5.2010 அன்று தாயகம் திரும்பினோம்.