தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, January 4, 2010

திரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்



எழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான காலத்தில் விருது கொடுப்பதைவிட இது போல் இளம் வயது எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் பயன் தரும்.

கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்த இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. பெற்றோர் வெங்கட்டன், சின்னம்மாள்.ஆசிரியராகப்பணியாற்றும் இமையம் இதுவரை மூன்று புதினங்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். 1994 இல் வெளியான கோவேறுகழுதைகள் தமிழின் முக்கியமான புதினங்களுள் ஒன்று. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிரைவண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் இப்புதினம் பரவலாக பேசப்பட்டது, விவாதங்களுக்கு உள்ளானது.இவரின் நூல்கள் அனைத்தையும் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1999 இல் வெளிவந்த ஆறுமுகம் புதினம் கதா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மூன்றாவது புதினமான செடல் 2006 இல் வெளிவந்தது. மண்பாரம் சிறுகதைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டும், வீடியோமாரியம்மன் சிறுகதைத் தொகுப்பு 2008 ஆம் ஆண்டும் வெளியாயின.

அக்னிஅக்சரா விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, அமுதனடிகள் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை 2002 ஆம் ஆண்டு இளநிலை ஆய்வு நல்கை இவருக்கு வழங்கியுள்ளது.

விருத்தாசலத்தில் வசித்துவரும் இவரைத் தொடர்பு கொள்ள, இமையம், முத்தமிழ் தெரு, பெரியார் நகர் தெற்கு, விருத்தாசலம்-606 001, பேச : 9865417399, மின்மடல் : imayam.annamalai@gmail.com

நண்பர் இமையம் மேலும் சிறந்த படைப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த வாழ்த்துவோம்.

3 comments:

  1. வாழ்த்துகள்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete
  2. நல்ல பதிவு. நண்பர் இரத்தின புகழேந்தியின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete