அரசு பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரி விடுதி வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆண்டுதோறும் இதே நாளில் ஆர்வலர்களைத் திரட்டி மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார் பாவேந்தர்பேரவை இலக்கிய அமைப்பின் நிறுவனர் ஓவியர் மோகன். இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிக்கு வந்து தகவலைக்கூறி அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார். இன்று காலையும் தொலைபேசில் நினைவூட்டினார். நானும் நண்பர் ரமேசுபாபுவும் சென்றோம். எதிர்பாராத விதமாக நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க என்னை அழைத்தார். வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பூமாலை குமாரசாமி, அரசியல் கட்சி பிரமுகர்கள், அமிர்தராசு, சிவா, ஆனந்தபாரதி, ஓவிர்கள் ரகு, ராசேந்திரன், வேலு, மணிகண்டன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நகரிலிருந்து தொலைவில் சிலை அமைந்திருப்பதால் பலரால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை, எனவே நாம் ஒன்றிணைந்து நகரின் மையத்தில் ஒரு சிலை அமைக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் கலந்துகொள்பவர்கள் பேசுவதுண்டு. ஆனால் அதோடு மறந்து விடுவோம். இந்தமுறை சிலை அமைக்கும் செலவுக்காக 1001 உருவாயைத் தருவதாக வழக்கறிஞர் சந்திரசேகரன் கூற பூமாலை சண்முகம் 5000 ரூ தருவதாக் கூற கூட்டத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தொகையை அறிவிக்க 15000 ரூ சேர்ந்தது. இதை வசூலித்து சிலை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
வள்ளுவர் வ்ழி சிந்திப்போம்.
ReplyDelete"தம்மின் தம் மக்கள் அறிவுடைமை"
.....என்று
தமிழ் இயலன்