தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, July 8, 2009

கோத்தி குறும்பட விமர்சனம்(திருநங்கையின் உண்மைக் கதை)

பெண்களிடம் ஆண் தன்மை மிகுந்திருப்பதும் , ஆண்களிடம் பெண் தன்மை மிகுந்திருப்பதும் கரு உருவாகும் போது இணையும் குரோமோசோம்களைப் பொருத்தது.குழந்தைப் பிறப்பில் ஏற்படும் இத்தகைய குறைபாடு அக்குழந்தை வளரும்போது மனோரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.அத்தகைய மன உளைச்சலை ஒரு திருநங்கையின் பார்வையில் பதிவு செய்திருக்கும் படம்தான் கோத்தி. அரை மணி நேரப்படம் பார்த்து முடிக்கையில் நாமே திருநங்கையாகி விட்டதைப் போன்ற மன உணர்வு நம்மையறியாமலே ஏற்படுகிறது. ஓர் உண்மையான திருநங்கையின் வாழ்க்கை என்பதால்தான் பார்வையாளர்களுக்கு இத்தகைய பாதிப்போ? அன்பு என்னும் சிறுவன் வளர வளர பெண்மை அவனுக்குள் பொங்கி வழியத்தொடங்குகிறது.அவனுடைய அன்றாட செயல்பாடுகளில் பெண் தன்மை வெளிப்படுகிறது. இதனைக் கவனித்து வரும் அவன் தந்தை அவனை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறார். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் அத்தனைக் கொடுமைகளையும் அன்பு எதிர்கொள்கிறான். இறுதியில் திருநங்கைகளிடம் அடைக்கலம் தேடிய அன்பு நிர்வாண கோத்தியாக்கப்பட்டு வளர்மதியாகிறாள். முழு திருநங்கையான பிறகு வளர்மதி சமூகத்தால் எப்படியெல்லாம் புறக்கணிக்கப் படுகிறாள் என்பது தான் மீதமுள்ள படம். திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் இப்படம் தோற்றுவிக்கிறது. நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் இப்படம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. தயாரிப்பாளர் பிரித்திவ்குமார், இயக்குனர் முத்துக்குமார் ஆகியோருக்கு வாழ்த்துகள். குறுந்தகடு வேண்டுவோர் தொடர்புக்கு 9841166519. இயக்குனர் முத்துக்குமார்

1 comment:

  1. Anbulla Pugazh
    kothi kurumpada seidhi kanden

    vaazhthukkal

    THAMIZHIYALAN

    ReplyDelete