உலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 15,16 தேதிகளில் சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டினைத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. இதர்காகத் தமிழறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்புகள்
1.தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள்
2. தமிழ் மொழி பாடப்பொருள் - காலத்திற்கேற்றவை
3. மனனம் செய்து கற்றல் மூலம் விளையும் பயன்கள்
4. தமிழ் மொழியின் எதிர்காலம்
5. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா?
6. தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்
7. பிற மொழி மாணவர்கள் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
8. தமிழ் மொழித்திறன் வளர்ப்பு - வழிவகைகள்.
9. தமிழ் வளர்த்த அறிஞர்கள்
10. ஆசிரியப்பணி அறப்பணி
கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் வழங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.
முழு வடிவில் கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் : 30/08/2012
பேராளர் கட்டணம் : ரூ.5000/-
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி
ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
78, பெல்சு சாலை
சென்னை - 600005.
பேசி : 044-28510575
மின்னஞ்சல் : testf@asiriyarkoottani.org
இணையதளம் : www.tamilkalam.in
"நல்ல தகவலுக்கு நன்றி !"
ReplyDelete