தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Sunday, June 17, 2012

தொழில்நுட்பக்கல்வி சேர்க்கை புதிய விதிமுறை


பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.



இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
         இது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் என்பதை கண்கூடாக இந்த ஆண்டு நான் கண்டேன். இதை உணர்ந்த வைக்கோ அவர்கள் ஏ.ஐ.சி.டி.இ. ன் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஒன்றில் படித்து அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேரிய மாணவன் ஏழ்மை நிலை காரணமாக பொறியியல் படிக்காமல் பாலி டெக்னிக் படிக்க நினைத்தான். 2 ஆம் ஆண்டில் சேர முடியாது என்ற அறிவிப்பால் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணைக்கொண்டு இப்போது முதலாண்டு சேரப்போகிறான். இது ஏழைகளின் தலையெழுத்து என்று விட்டு விடாமல் மற்ற அரசியல் தலைவர்களும் இதனை கண்டித்து பழைய நிலை தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வைக்கோ அவர்களை இந்த கண்டன அறிக்கைக்காகப் பாராட்டுவோம்.

நன்றி : தினமணி, கல்விச்சோலை