தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, April 1, 2015

விருத்தாசலத்தில் கவிதை நூல் அறிமுக விழா.




கவிஞர் கருணாகரசு எழுதிய நீ வைத்த மருதாணி கவிதை நூல் அறிமுக விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
விர்த்தாசலம் நகராட்சிப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமை வகித்தார். கவிஞர் பட்டி.சு.செங்குட்டுவன், தலைமை ஆசிரியர் வீரராகவன், ரோட்டரி சங்க தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்புரையாற்றினார் .
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் கவிதை நூலை வெளியிட கருவேப்பிலங்குறிச்சி அரிமா சங்க செயலர் வெற்றிவேல் பெற்றுக்கொண்டார்.
தமிழ் படைப்பாளிகள் பேரியக்க மாநில செயலாளர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மாநில பொருளாளர் கவிஞர் ஆறு.இளங்கோவன், கவிஞர்கள் புதூர் சாமி, பூவனூர் அரங்கநாதன் கவிதாயினி சிலம்புச்செல்வி ஆகியோர் கவிதை நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள்.
எழுத்தாளர்கள் ஒகளூர் நிலவன், ஓவியர் மோகன், பழமலை, டேனியல் ரொசாரியோ, இளம்பரிதி , பாரதிரெங்கன் , செல்வமணி, செல்வசுப்ரமனியன் , ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் இரத்தின.புகழேந்திக்கு மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் 'இலக்கியச்சுடர் ' பட்டம் வழங்கப்பட்டது.
இறுதியாக எழுத்தாளர் மலர்தாசன் நன்றி கூறினார் .

No comments:

Post a Comment