தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, June 10, 2015

கலைவிளையும் நிலம் நூல் அறிமுகம்


கலை விளையும் நிலம் என்ற தலைப்பில் எனது கட்டுரைகளைத்தொகுத்து நூலாக வெளியிட உள்ளேன். இன்று நூல் அச்சாகி வந்துள்ளது. அதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
                  22/105 , பாஸ்கர் காலனி
                  3 ஆவது தெரு விருகம்பாக்கம்
                  சென்னை -600092
                  893987276 
பக்கம்: 168
விலை:150
அட்டைப்படங்கள்: ந.செல்வன்
வடிவமைப்பு: கீர்த்தி&ஹபிப்


முன்னுரையிலிருந்து...

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறு இணைப்பாக வெளிவந்த களஞ்சியம் இதழில் பணியற்றிய தோழர் யாணன் அவர்கள் கலைகள் குறித்த இக்கட்டுரைகள் வெளிவர காரணமாக இருந்தார். தெருக்கூத்து பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவுதான் கிராமத்து விளையாட்டுகள், கலை விளைந்த நிலம் ஆகிய இருநூல்களும். நண்பர் யாணன்  அவர்களுக்கு நன்றி.
          கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வழங்கிய கட்டுரை ஏலாதி உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள். திருமுதுகுன்றம் கவிதைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
          தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு என்ற கட்டுரை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கியது.
          சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் புதுவை வானொலியில் ஏழு நாட்கள் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும்.
          இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளில் ஆசிரியரால் குறிப்பிடப் பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன சில விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
          விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி எழுதிய விடுதலை வேர்கள் கட்டுரை வெளியானதன் விளைவாக இன்று பாடநூல்களில் அவரைப் பற்றிய விரிவான வரலாறு இடம்பெற்றுள்ளது.
          அதுபோலவே மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்று நான் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது. புதிய மதிப்பீட்டு முறை (CCE) வருவதற்கு முன்பே என் ஆய்வு அதனை வலியுறுத்தியது.
          பள்ளி நூலகங்களை மாணவர்கள் அணுக இயலாத சூழலிருந்தது அதனை வெளிப்படித்தியது பெட்டிக்குள் உறங்கும் நூல்கள் கட்டுரை. அதற்கான தீர்வாகத்தான் வகுப்பறை நூலகம் என்னும் புத்தகப் பூங்கொத்து திட்டம்.
          நிலம் கையகப் படுத்தும்போது வழங்கும் இழப்பீடு போதுமானது இல்லை என்னும் கருத்தை வலியுறுத்தியதுநிலம் கையகப்படுத்தும் அரசியல்கட்டுரை. இப்போது ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
                    விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசால் கைவிடப் பட்டாலும். ஒரு காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கான நம்பிக்கையை போராட்ட உணர்வை மக்களிடம்  இந்த நூலில் இடம்பெற்றுள்ள  ஊர்ப்பெயர் அரசியல் என்னும் கட்டுரை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

          நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள நிவேதிதா பதிப்பகத்தாருக்கும் அதற்குக் காரணமாக இருந்த நண்பர் கவிஞர் பல்லவி குமார் அவர்களுக்கும் நன்றி. என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் நண்பர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்.

2 comments:

  1. வணக்கம்
    புத்தகம் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete