தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, May 24, 2012

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்-நூல் அறிமுகம்





                                      தென்னவராயன்பட்டு வேணுகோபால்



                 அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் வாழ்த்துரை







தென்னவராயன் பட்டுஇராமசாமி, விடுதலைப்போராட்ட வீரர் வேணுகோபாலசாமி அவர்களின் , நல்லாசிரியர் சஞ்சீவிராயன் ஆகிய மூன்றுதலைமுறை வரலாற்றை பேராசிரியர் த. பழமலை அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலுக்கு அறிமுகவுரை எழுதியுள்ள அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் பல வரலாற்று உண்மைகளையும் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் பெயரால் எப்படியெல்லாம் ஒடுக்கினர் என்பதையும் அதற்கு எதிராக தந்தை பெரியார் ஆற்றிய தேர்தல் பணிகள் பற்றியெல்லாம் வெகுசன வரலாற்றில் அதிகம் பேசப்படாத செய்திகளை ஆனைமுத்து அவர்கள் இங்கே பதிவுசெய்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதிதிராவிடர்களும் வன்னியர்களும் இணைந்து தேர்தல் களம் கண்டு வெற்றிபெற்ற செய்திகள் இன்றைக்கு பாடமாக அமைகின்றன.
இந்த நூலைத் தொகுத்துள்ள பேராசிரியர் பழமலை அவர்கள் கடின உழைப்பு செய்திகளில் மிளிர்கிறது. அவர் முன்னுரையில்,"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வழங்கும் நம்முடைய பண்டைநாள் நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டவையே அந்நாளில் அவற்றைத்தொகுத்தவர்கள் பட்ட அரும்பாட்டை இன்று நாம் நினைத்துப் பார்க்கவும் இயலாது. நம் கற்பனைக்கும் எட்டாது. இந்நாளில், இந்நூலைத் தொகுக்கையில் அடியேன் பட்ட பாடு அவர்கள் கடின உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இருக்கலாம். இதுதான் ஆசை பற்றி அறையலுற்றேன் என்பது". என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்
பக்கங்கள் : 192
விலை : ரூ.100/-
கிடைக்குமிடம் : மலையரசன் பதிப்பகம்
தென்னவராயன் பட்டு
வாக்கூர் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் - 605501.

1 comment: