தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, February 5, 2011

அம்மி மிதித்து அருந்ததி பார்த்த சீன நாட்டுப்பெண்

இன்று காலை உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றேன். மணமகன் செந்தில்குமார் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கண்மணி நகர்.அங்கு பாணியாற்றும் சீன நாட்டுப் பெண்ணை தமிழ் முறைப்படி இன்று காலை திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் சொந்த ஊர் சீனாவின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டம் குங்ஜாவ் ப்ரவீன்ஸ், (பி.ஆர். சைனா) மணமகள் லியூ யிங் கூரைப் புடவை கட்டி தமிழ்ப்பெண்ணாக மாலையும் கழுத்துமாக மண மேடையில் அமர்ந்திருக்க அவரின் பெற்றோர் லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் ஆகியோர் வேட்டியும் புடவையும் உடுத்தி தமிழர்களாக பாத பூசை சகிதம் அனைத்து சடங்குகளோடும் திருமணம் நடந்தது. தாலி கட்டியதும் மணமகள் அம்மி மிதிக்க அவரின் மாமியார் மலர்க்கொடி மெட்டி அணிவிக்க உறவினர் அனைவரும் வியந்து மணமகனின் பெற்றோர் ராசவேலு மலர்க்கொடியை பாராட்டினர். ராசவேலு வெண்பா எழுதுவதில் வல்லவர். 2000 குறள் வெண்பாக்களை எழுதி வைத்துள்ளார் வெளியிடுவதற்குத் தயாராக.
மணமக்களுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றோம். நீங்களும் மண மக்களை வாழ்த்துங்கள். இந்திய சீன நல்லுறவிற்கு இரு குடும்பங்களும் தங்கள் பங்களிப்பை எளிமையாகவும் உறுதியாகவும் செய்திருப்பதற்காக அவர்களுக்கு நம் பாரட்டுகள்.

No comments:

Post a Comment