தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, July 3, 2010

மலேசிய சுற்றுப்பயணம்







மலேசியாவில் சிங்கப்பூர் அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை திருடர்கள் பயம் அதிகம் இரவில் பெண்கள் நகை அணிந்து செல்வது பாதுகாப்பற்றது என எச்சரித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலியைப் பறித்துவிடுவார்களாம். டைநாஸ்டி விடுதியில் 27 ஆவது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்லவே அச்சமாக இருந்தது. முதல் நாள் நகரச்சுற்றுலாவில் பத்துமலை முருகன் கோயில் சென்றோம் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பாததனால் நான் சென்ற பேருந்தை தவற விட்டு மற்றொரு பேருந்தில் செல்ல நேர்ந்ததை மறக்க இயலாது. மலேசிய விடுதலைக்குப் போரிட்டு உயிர்நீத்த ஈகியர் சிலைகளைப்பார்த்தோம். இரட்டை கோபுரம், சாக்லேட் தொழிற்சாலை போன்ற இடங்களைப்பார்த்தோம். மறு நாள் ஜெண்டிங் கற்பனைப் பூங்கா சென்றோம் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கம்பி வடத்தில் சென்றோம் கீழே பார்க்கக் குலை நடுங்கியது. உலகின் மிகப்பெரிய கம்பிவடப் போக்குவரத்து இது என்றும் கின்னஸில் இடம்பெற்றுள்ளது என்றும் எங்கள் வழிகாட்டி திருமதி சாரா கூறினார். இங்கு சாராவைப்பற்றி சொல்லியாக வேண்டும் சீன இனத்தில் பிறந்து மலாயில் வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர் இந்தியரை மணத்துகொண்டவர் (அவரும் எங்கள் குழுவினருக்கு வழிகாட்டியாக வந்தவர்) பேருந்து நிற்குமிடத்திலெல்லாம் இறங்கியதும் சிகரெட்டைப் பற்றவைத்துவிடுவார் சாரா. பெண்கள் சிகரெட் பிடிப்பதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். எனக்கு சாரா என்ற பெயரைக் கேட்டதும் பணியிடைப் பயிற்சியில் பாடிய 'சாரா.. சாரா மை டார்லிங் டோண்ட் யு க்ரை...' என்ற பாடல்தான் நினைவுக்கு வர அவரிடம் பாடிக்காட்டினேன் புன்னகையுடன் ரசித்துக் கேட்டார்.
ஜெண்டிங்கில் அனைத்து வித பொழுதுபோக்குகளும் அமைந்திருந்தது. அவ்வளவாக அதில் நாட்டமின்மையால் நண்பர்களோடு சுற்றித்திரிந்தோம். மாலை வேளைகளில் மலேசியாவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இயலவில்லை. இத்தனைக்கும் உலங்கு வானூர்தியில் போக்குவரத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறார்களாம். ஒரு நாள் இரவு வீட்டுக்கு தொலைபேசுவதற்காக ஈப்போ சாலையில் ( மலாய் மொழியில் சாலையை ஜலாங் என்கிறார்கள்) இரவு ஒன்பது மணிக்குச் சென்றோம் நானும் நண்பர் செல்வினும் அங்கு ஒரு உணவு விடுதியின் முன்புறம் வீதி ஓரத்தில் அமர்ந்து இரண்டு நடுத்தர வயது பெண்கள் (குட்டைப்பாவாடை அணிந்திருத்தனர்) மது அருந்திக்கொண்டு சிகரெட் பிடித்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர் இது போன்ற காட்சிகள் எதையும் சிங்கப்பூரில் பார்க்க முடியவில்லை. தூய்மையைப் பேணுவதிலும் சிங்கப்பூர் அளவுக்கு மலேசியா இல்லை. நம் தமிழர்கள் பலர் மலேசியாவில் அதுவும் கோலாலம்பூரில் கடை வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒரு வழியாக மலேசிய சுற்றுப்பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு 23.5.2010 அன்று தாயகம் திரும்பினோம்.

2 comments:

  1. 'சாரா.. சாரா மை டார்லிங் டோண்ட் யு க்ரை...' என்ற பாடல்தான் நினைவுக்கு வர அவரிடம் பாடிக்காட்டினேன்

    :)))

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை...

    உண்மையான நகைச்சுவைகளை

    உள்ளடக்கியிருந்தது...

    நன்று...

    தமிழ் இயலன்

    ReplyDelete