தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, July 3, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு







உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை உற்றுநோக்கியதில் எனக்குத்தோன்றிய நிறை குறைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்

மாநாட்டின் நிறைகள்
இதுவரை நடைபெற்ற மாநாடுகளைக் காட்டிலும் மக்கள் திரள் மிகவும் அதிகம். நீண்ட வரிசையில் காத்திருந்து கண்காட்சியைக் கண்டுகளித்தனர். இனியவை நாற்பது சங்க இலக்கியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தியது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 வகை மலர்கள் படங்களுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. சிந்துவெளி கண்காட்சியை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தினர் காட்சிப்படுத்திய பாங்கு. பேராளர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பாராட்டும்படி அமைந்தது. அரங்குகள் அனைத்தும் அதி நவீன வசதிகளுடன் அமைந்திருந்தன சங்ககாலப் புலவர்களின் பெயரில் நவீன ஓவியங்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டின் குறைகள்
ஆய்வுக் கட்டுரைகள் சரியாக தேர்வு செய்யப்படவில்லை. மாநாட்டு மலரில் இளம் படைப்பாளர்களுக்கு பேதிய இடமளிக்கவில்லை. நவீன இலக்கியவாதிகள் அழைக்கப்படவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான உறுப்படியான அறிவிப்புகள் இல்லை. முக்கியமான அயல்நாட்டு அறிஞர்களின் (ஜார்ஜ்ஹார்ட், அஸ்கோபர்போலா) கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை. நுட்பமான ஆய்வுகள் மிகவும் குறைவான அளவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியின் பழம்பெருமை பேசுவதற்கு அளித்த முக்கியத்துவம் எதிர்கால வளர்ச்சி குறித்து பேசுவதற்கு அளிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment