விருதுகள் என்றாலே சர்ச்சைகளுக்குக் குறைவிருக்காது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள அய்யன் திருவள்ளுவர் விருது தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப்பண்பாட்டு மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களுக்கு அறிவித்ததன் மூலம் அவ்விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி என்னும் சிற்றூரில் 1941 ஆம் ஆண்டு பொன்னுசாமி, பழனியம்மாள் இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிக்கல்வியை இரும்புலிக்குறிச்சியிலும் கல்லூரிக்கல்வியை திருப்பனந்தாள் தமிழ்க்கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் பயின்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து 1973-74 இல் யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வுத்தகைஞராக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம்,வடமேற்குப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் உயராய்வுகளை தணிக்கை செய்தார். 1975 இல் சென்னையிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1977 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும்,தமிழ்த்துறைத் தலைவராகவும், மொழியியல் செயல்திட்ட இயக்குநராகவும், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் பள்ளி தலைவராகவும் கீழ்த்திசை ஆய்வு நிறுவன இயக்குநராகவும் திறம்படப் பணியாற்றியவர். மேலும் டோக்கியோவிலுள்ள காக்குயின் பல்கலைக்கழகத்தில் சப்பான் தமிழ் ஒப்பாய்வுத் திட்டத்தில் வருகைதரும் பேராசிரியராக 90,93,96 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்,90களின் இறுதியில் கோலாலம்பூர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் படிப்புத்துறையில் புறநிலை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இவர் கல்விபயின்ற காலத்திலும் பணியாற்றிய காலத்திலும் அறிவாற்றலால் இவரைக்கவர்ந்த பேராசிரியர்கள் பலர் அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் தெ.பொ.மீ., அகஸ்தியலிங்கம் ஆவர். ஒப்பீட்டாயவில் மதிப்புமிக்க ஆலோசனைகளைஅயல் நாட்டுப் பேராசிரியர்களிடம் பெற்றதுண்டு.அப்படிப்பட்ட பேராசிரியர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.ஆர்.மார், டி.பர்ரோ; அமெரிக்கப்பேராசிரியர் எம.பி.எமினோ, சப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோ ஆவர். தமிழ் இலக்கணத்தில் இவரின் ஆய்வுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவை. தமிழ் இலக்கணக் கோட்பாடுகள்,இலக்கண உலகில் புதிய பார்வை,ஜிலீமீ ஸ்மீக்ஷீதீ வீஸீ னீஷீபீமீக்ஷீஸீ ஜிணீனீவீறீ ஆகிய நுல்கள் குறிப்பிடத்தகுந்தவை மேலும் வினைச்சொற்களை வகைப்படுத்துவதில் கோதண்டராமன் வகைப்பாடு எனற புதிய வகைமாதிரியை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. ஒப்பாய்வுத் துறையில் கால்டுவெல்லுக்குப் பிறகுக் குறிப்பிடத்தகுந்தது இவரது பணி. தமிழ் மொழி உலகமொழிகளோடு கொண்டுள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் ஆய்வு நூல் தமிழுக்குக் கிடைத்தக் கொடையாகும். தமிழின் சிறப்புகளை உலகநாடுகளுக்கு உணர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு.ஜிணீனீவீறீ விஷீக்ஷீஜீலீமீனீவீநீs, விஷீபீமீக்ஷீஸீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, லிவீஸீரீuவீstவீநீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ stuபீவீமீs ஆகிய நூல்களில் இவர் அறிவு நுட்பம் வெளிப்படுகிறது. பிற மொழியாளர்களுக்குத் தமிழ்க் கற்பிக்க புதிய அணுகுமுறையில் பாட நூல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் மொழியியல் பற்றி இவர் ஆற்றிய உரைத்தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. படைப்பபிலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களில் இவரும் ஒருவர்.புலமை ஆராய்ச்சி இதழை 1974 முதல் இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இப்போது தமிழியல் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்விதழ் வெளிவருகிறது. பல ஆய்வாளர்களை, பேராசிரியர்களை வளர்த்த பெருமை அவ்விதழுக்கு உண்டு. இன்றுதான் நம் தமிழ்மொழிகுச் செம்மொழித் தகுதியை நடுவணரசு வழங்கியிருக்கிறது, ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் தேவையான மொழிக்கொள்கைகளை வகுத்து வெளியிட்டவர் பொற்கோ. இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தது போன்றது இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை விளக்கமாகும். இது தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியாகும். உரையாசிரியரின் கருத்தைத் திருவள்ளுவர் மீது திணிக்காமலும், விளங்கிக்கொள்ள இயலாத இடங்களில் இப்போதைக்கு விளங்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறும் பண்பாடும் இவரது உரையின் தனிச்சிறப்புகள். மேலும் ஒவ்வொரு குறளையும் எப்படி வாசித்து எளிதாகப் பொருள் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.எடுத்துக்காட்டாக முதல் குறளை எப்படி வாசிப்பது என்றுபார்ப்போம் "எழுத்தெல்லாம் அகர முதல.உலகு ஆதிபகவன் முதற்றே." இதனை உரைத்தொடர் என்றுகுறிப்பிட்டு இதற்கு அடுத்து உரைத்தொடர் விரி, அதனைத்தொடர்ந்து பொருள்விளக்கமும் குறிப்பும் என்ற வரிசையில் இந்த உரைவிளக்கம் அமைந்திருப்பது கற்போரை மேலும் திருக்குறளைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. இப்பணியை வாழ்நாள் பணியாகச் செய்திருப்பது பொற்கோஅவர்களின் சாதனை என்றுதான் கூறவேண்டும். 1978 இல் தொடங்கி 2003 இல் தான் முடித்துள்ளார். தியானத்தின் அவசியத்தை உணர்த்தும் நல்ல உள்ளம் நல்ல மனம்,இலக்கணம் தொடர்புடைய சொற்களுக்கு விளக்கம் கூறும் இலக்கணக் கலைக் களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி ஆகிய நூல்களும் இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நீண்டகாலமாக நிரப்பப்படாமலிருந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைப் பணியமர்த்தி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் உலக அளவில் உயர் பதவிகளில் உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் முனைவர் ஆறு.இராமநாதன், நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் அரங்கராசன், தமிழக அரசின் பரிசுபெற்ற சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் எழுதிய பேராசிரியர் அமிர்தலிங்கம் ஆகியோர் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். உலகம் போற்றும் அறிஞராகத் திகழும் பொற்கோ அவர்கள் தமிழ் இனத்திற்குப் பெருமைசேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தமிழர்களுக்குப் பெருமை. அவருக்கு இவ்விருதை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">

Sunday, April 19, 2009
விருதுக்கு பெருமை சேர்த்த பொற்கோ
விருதுகள் என்றாலே சர்ச்சைகளுக்குக் குறைவிருக்காது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள அய்யன் திருவள்ளுவர் விருது தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப்பண்பாட்டு மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களுக்கு அறிவித்ததன் மூலம் அவ்விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி என்னும் சிற்றூரில் 1941 ஆம் ஆண்டு பொன்னுசாமி, பழனியம்மாள் இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிக்கல்வியை இரும்புலிக்குறிச்சியிலும் கல்லூரிக்கல்வியை திருப்பனந்தாள் தமிழ்க்கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் பயின்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து 1973-74 இல் யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வுத்தகைஞராக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம்,வடமேற்குப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் உயராய்வுகளை தணிக்கை செய்தார். 1975 இல் சென்னையிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1977 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும்,தமிழ்த்துறைத் தலைவராகவும், மொழியியல் செயல்திட்ட இயக்குநராகவும், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் பள்ளி தலைவராகவும் கீழ்த்திசை ஆய்வு நிறுவன இயக்குநராகவும் திறம்படப் பணியாற்றியவர். மேலும் டோக்கியோவிலுள்ள காக்குயின் பல்கலைக்கழகத்தில் சப்பான் தமிழ் ஒப்பாய்வுத் திட்டத்தில் வருகைதரும் பேராசிரியராக 90,93,96 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்,90களின் இறுதியில் கோலாலம்பூர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் படிப்புத்துறையில் புறநிலை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இவர் கல்விபயின்ற காலத்திலும் பணியாற்றிய காலத்திலும் அறிவாற்றலால் இவரைக்கவர்ந்த பேராசிரியர்கள் பலர் அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் தெ.பொ.மீ., அகஸ்தியலிங்கம் ஆவர். ஒப்பீட்டாயவில் மதிப்புமிக்க ஆலோசனைகளைஅயல் நாட்டுப் பேராசிரியர்களிடம் பெற்றதுண்டு.அப்படிப்பட்ட பேராசிரியர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.ஆர்.மார், டி.பர்ரோ; அமெரிக்கப்பேராசிரியர் எம.பி.எமினோ, சப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோ ஆவர். தமிழ் இலக்கணத்தில் இவரின் ஆய்வுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவை. தமிழ் இலக்கணக் கோட்பாடுகள்,இலக்கண உலகில் புதிய பார்வை,ஜிலீமீ ஸ்மீக்ஷீதீ வீஸீ னீஷீபீமீக்ஷீஸீ ஜிணீனீவீறீ ஆகிய நுல்கள் குறிப்பிடத்தகுந்தவை மேலும் வினைச்சொற்களை வகைப்படுத்துவதில் கோதண்டராமன் வகைப்பாடு எனற புதிய வகைமாதிரியை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. ஒப்பாய்வுத் துறையில் கால்டுவெல்லுக்குப் பிறகுக் குறிப்பிடத்தகுந்தது இவரது பணி. தமிழ் மொழி உலகமொழிகளோடு கொண்டுள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் ஆய்வு நூல் தமிழுக்குக் கிடைத்தக் கொடையாகும். தமிழின் சிறப்புகளை உலகநாடுகளுக்கு உணர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு.ஜிணீனீவீறீ விஷீக்ஷீஜீலீமீனீவீநீs, விஷீபீமீக்ஷீஸீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, லிவீஸீரீuவீstவீநீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ stuபீவீமீs ஆகிய நூல்களில் இவர் அறிவு நுட்பம் வெளிப்படுகிறது. பிற மொழியாளர்களுக்குத் தமிழ்க் கற்பிக்க புதிய அணுகுமுறையில் பாட நூல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் மொழியியல் பற்றி இவர் ஆற்றிய உரைத்தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. படைப்பபிலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களில் இவரும் ஒருவர்.புலமை ஆராய்ச்சி இதழை 1974 முதல் இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இப்போது தமிழியல் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்விதழ் வெளிவருகிறது. பல ஆய்வாளர்களை, பேராசிரியர்களை வளர்த்த பெருமை அவ்விதழுக்கு உண்டு. இன்றுதான் நம் தமிழ்மொழிகுச் செம்மொழித் தகுதியை நடுவணரசு வழங்கியிருக்கிறது, ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் தேவையான மொழிக்கொள்கைகளை வகுத்து வெளியிட்டவர் பொற்கோ. இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தது போன்றது இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை விளக்கமாகும். இது தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியாகும். உரையாசிரியரின் கருத்தைத் திருவள்ளுவர் மீது திணிக்காமலும், விளங்கிக்கொள்ள இயலாத இடங்களில் இப்போதைக்கு விளங்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறும் பண்பாடும் இவரது உரையின் தனிச்சிறப்புகள். மேலும் ஒவ்வொரு குறளையும் எப்படி வாசித்து எளிதாகப் பொருள் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.எடுத்துக்காட்டாக முதல் குறளை எப்படி வாசிப்பது என்றுபார்ப்போம் "எழுத்தெல்லாம் அகர முதல.உலகு ஆதிபகவன் முதற்றே." இதனை உரைத்தொடர் என்றுகுறிப்பிட்டு இதற்கு அடுத்து உரைத்தொடர் விரி, அதனைத்தொடர்ந்து பொருள்விளக்கமும் குறிப்பும் என்ற வரிசையில் இந்த உரைவிளக்கம் அமைந்திருப்பது கற்போரை மேலும் திருக்குறளைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. இப்பணியை வாழ்நாள் பணியாகச் செய்திருப்பது பொற்கோஅவர்களின் சாதனை என்றுதான் கூறவேண்டும். 1978 இல் தொடங்கி 2003 இல் தான் முடித்துள்ளார். தியானத்தின் அவசியத்தை உணர்த்தும் நல்ல உள்ளம் நல்ல மனம்,இலக்கணம் தொடர்புடைய சொற்களுக்கு விளக்கம் கூறும் இலக்கணக் கலைக் களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி ஆகிய நூல்களும் இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நீண்டகாலமாக நிரப்பப்படாமலிருந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைப் பணியமர்த்தி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் உலக அளவில் உயர் பதவிகளில் உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் முனைவர் ஆறு.இராமநாதன், நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் அரங்கராசன், தமிழக அரசின் பரிசுபெற்ற சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் எழுதிய பேராசிரியர் அமிர்தலிங்கம் ஆகியோர் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். உலகம் போற்றும் அறிஞராகத் திகழும் பொற்கோ அவர்கள் தமிழ் இனத்திற்குப் பெருமைசேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தமிழர்களுக்குப் பெருமை. அவருக்கு இவ்விருதை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment