அம்பானி வளர்வதேன்?
அரசாங்கம் நலிவதேன்?
மோடி வித்தையால்.
மோடி வித்தையால்.
திருவாளர்
அம்பானி அவர்கள் ஜியோவை இலவசமாகக் கொடுத்தபோதே வாங்க மறுத்தவர்களில் நானும் ஒருவன்.
நம் பி.எஸ்.என்.எல்.ஐ வாழவைப்பது நம் கடமை என்றிருந்தேன். இலவசக்காலம் முடிந்து ஒரு
நாளைக்கு ஒரு ஜி.பி. மூன்று மாதத்திற்கு
500 ரூபாய் என்று அறிவித்து சில நாட்களிலேயே நம் தேசிய இணைய இணைப்பு திக்கித்திணறியது.
அப்போதும் பொறுத்துக்கொண்டேன். மாதங்கள் சில உருண்டன மாதம் ரூ.1250 பில் வந்துகொண்டே
இருந்தது ஆனாலும் இணையத்தைப் பயன்படுத்த இயலவில்லை. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது.
அம்பானி நம்ம மோடத்துல வைரஸை விட்டுட்டார்ன்னு ரீ பூட் செய்து கொடுத்தார்கள். ஆனாலும்
எவ்வித மாற்றமும் இல்லை. எத்தனை மாதம்தான் பயன்படுத்தாமலே கட்டணம் செலுத்துவது என்கிற
மன நிலைக்குத் தள்ளப்பட்ட நான் ஒருவழியாக பாரத் சஞ்சார் நிகாமுடனான இணைய இணைப்பை மட்டும்
துண்டித்து தரை வழி தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.
இது ஒரு புறம் இருக்க மகள் பரிசளித்த புதிய கைபேசிக்கு
4ஜி சிம் வாங்கிட கடைக்குச்சென்றேன். ஆதார் எண் கேட்டார் கைரேகை வைக்கச்சொன்னர் 5 நிமிடங்களில்
வேலை முடிந்தது. கையோடு செல் ஒன் சிம்மையும் மாற்றிவிடலாமே என்று பா.ச.நி. அலுவலகம்
சென்று கேட்டேன். உங்கள் முகவரிக்கான அடையாளச் சான்றும் புகைப்படமும் எடுத்து வாருங்கள்
என்றார் நம் அரசு அலுவலர். நான் அவரிடம் கேட்டேன் ஏன் சார் எங்க ஆதார் விவரத்தை எல்லாம்
அம்பானியே வச்சிருக்காரு அரசாங்கத்திடம் இல்லையா? என்று… அவரால் பதிலளிக்க இயலாமல்
பரிதாபமாக என்னைப்பார்த்தார். தாள் குப்பைகளை நீங்கள் சேர்த்து வைத்து அலுவலகத்தைக்
குப்பைக்கூடமாக்குங்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு செல் கடைக்குச் சென்றேன் பழைய சிம்மை நேனோ சிம்மாக
ஒரு நிமிடத்தில் நறுக்கிக் கொடுக்க நன்றி சொல்லி விடைபெற்றேன்.
மோடி வித்தை என்பது
இதுதானோ?
அனுபவம் அருமை.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஇன்னும் எனக்கு இந்த BSNL நிறுவனம் ரூ.500 தரவே இல்லை(ஆதாரம் உள்ளது).... இணைப்பே கொடுக்காமல்... Bill கொடுத்திருக்கிறார்கள்......
ReplyDelete