தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, August 7, 2014

உங்களுக்கு தெரியுமா? எல்லோருக்கும் சொல்லுங்கள்

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
-----------------------------------------------------------
107-A செங்குப்தா வீதி , ராம்நகர், கோவை-641009
போன்-0422-2236633, 2236644
தமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை 1990 ஆம் ஆண்டுமுதல் +1 , +2 , மற்றும் கல்லூரி படிப்பு தொடரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
3.03.2013நாளிதழ்கள் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள "நகராட்சி,மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில்" 2012-2013 கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்து 90 %(1080/1200) மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களது கல்லூரி படிப்பிற்கான முழு உதவிதொகையை (வருடத்திற்கு அதிகபட்சம் ரூ ஒரு இலட்சம்) அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும் என்பதை அறிவித்திருந்தோம்.
இந்த செய்தி , தினசரி பத்திரிகை வாங்கி கூட படிக்க முடியாத கிராமங்களில் உள்ள ஏழை-எளிய மாணவர்களுக்கு சரியாக சென்றடையாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து நகராட்சி,மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில், தகுதியான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முழு உதவிதொகையை (வருடத்திற்கு அதிகபட்சம் ரூ ஒரு இலட்சம்) குறித்து தெரிவித்து பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இங்ஙனம்
ஒ. ஆறுமுகசாமி, நிறுவனர்
--------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே இத்தகவலை தங்கள் வலைப்பக்கத்திலும்,நேரடியாகவும் , மற்றும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பயனுறு மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் பரவ செய்யுங்கள் .
இந்த அறக்கட்டளை கோவையை சுற்றி உள்ள நான்கு மாவட்ட மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக மதம்,மொழி இனம் ஜாதி கடந்து உதவி வருகிறது.
இவ்வுதவிதொகை பெறுவதற்காக கோவைக்கு வரும் மாணவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எனது தொலைபேசியில் அழைக்கலாம்....
அன்புடன் கார்த்திகை மைந்தன்

1 comment:

  1. வணக்கம்
    தகவலுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete