தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, January 13, 2014

அஞ்சல்வழி பொங்கல் வாழ்த்து



அஞ்சலில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் குறைந்து வருகிறது என்கிற புலம்பல் அண்மைக்காலமாக நண்பர்களிடமிருந்து கேட்க நேர்ந்தது. இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில பல ஆண்டுகளாக நானும் அஞ்சலில் வாழ்த்து அனுப்பவில்லை. முன்பெல்லாம் நானே கவிதை எழுதி அதை அச்சிட்டு வாழ்த்தாக்கி அனுப்புவேன். அந்த வழக்கத்தை புதுப்பித்தால் என்ன என்று தோன்றியது. கணினியில் microsoft office publisher பயன்படுத்தி நான் எடுத்த படங்களையும் சென்ற ஆண்டு எழுதிய கவிதையையும் வைத்துக்கொண்டு ஒரு வாழ்த்தைத் தயாரித்து இன்று அஞ்சல் நிலையம் சென்று இணையத்தில் தொடர்புகொள்ள முடியாத உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன். அதில் இன்னொரு சுவையான தகவல் கிடைத்தது . சினிமா நூற்றாண்டு விழா நினைவு அஞ்சல்தலைகளை நம் அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. எனக்கு வந்த சில பொங்கல் வாழ்த்துகளை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளேன். கவிஞர் அறிவுமதி, நடிகர் நெப்போலியன் அரங்கேற்றம் இதழ் ஆசிரியர் கிள்ளிவளவன் ஆகியோரின் வாழ்த்து குறிப்பிடத்தகுந்தவை. நாம் அனுப்பும் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிலர் நன்றி அட்டைகளை அனுப்புவதுண்டு. அப்படி நானும் அனுப்பினேன். எனக்கு வந்த சில நன்றி அட்டைகளையும் பாதுகாத்து வைத்துள்ளேன். எதிர்காலத்தில் இவையெல்லாம் கூட ஆவணங்களாகலாம். (பின்லாந்து நாட்டில் ஒரு உள்நாட்டுக்கடிதத்தை மிகப்பெரிய ஆவணமாக பெற்று பாதுகாக்கின்ற வழக்கம் உண்டாம்.) ஒருமுறை உழவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி ஒரு பொங்கல் வாழ்த்து அசிட்டு அனுப்பினேன். ஆனதவிகடன், பாக்யா போன்ற இதழ்களுக்கும் அதை அனுப்பினேன். அதன் ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், பாகியராஜ் ஆகியோர் அனுப்பிய பதில் கடிதங்களும் என் கோப்பில் இன்றும் பத்திரமாக உள்ளன.

2 comments:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete