தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, April 19, 2011

பேராசிரியர் முனைவர் ஆறு இராமநாதன் பணி பாராட்டு , நூல் வெளியீட்டு விழா


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் முனைவர் ஆறு இராமநாதன் அவர்களின் பணிகளைப் பாராட்டியும் நூல்களை வெளியிட்டும் சிறப்பானதொரு விழாவை அவரது மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் நிகழ்த்துகின்றனர். நாட்டுப்புறவியல் துறைக்கு பேராசிரியர் ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்க்வை. நிட்டூரி கதை, சின்னண்ணன் சின்னச்சாமி கதை ஆகிய கதைகள் குறித்து அவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மேற்கொண்ட வரலாற்று நிலவியல் கோட்பாட்டு ஆய்வு இதுவரை தமிழில் யாரும் செய்யாத முயற்சி. முனைவர் பட்ட ஆய்வுக்கு வரும் மாணவர்களை தரமான ஆய்வாளர்களாக உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.
ஆய்வு நேர்மையும் அயரா உழைப்பும் பேராசிரியரின் தனித்தன்மைகள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த பேராசிரியரின் பணிகளைப் பாராட்டி நிகழும் விழா பற்றிய விவரங்கள் அழைப்பில் கண்சடுள்ளவாறு நிகழும்.

நாள் : 21.04.2011.

காலம் : காலை 10.30

இடம் : தமிழ்ப் பல்கலைக் கழக மொழிப்புல அரங்கு


வரவேற்பு : சேவியர் அந்தோணி

தலைமை : முனைவர் த. சந்திரகுமார்

சிறப்புரை : பாவலர் அறிவுமதி
வ. கவ்தமன் திரைப்பட இயக்குநர்

வாழ்த்துரை : முனைவர் ச. பரிமளா பதிவாளர் (பொ)
திருமதி புனிதா - தாளாளர், பாரத் கல்வி நிறுவனம்
முனைவர் அந்தோணி குருசு

ஏற்புரை : முனைவர் ஆறு இராமநாதன்

நன்றியுரை : முனைவர் சக்திவேல்.

பேராசிரியருக்கு உங்கள் வாழ்த்துகளைச் சொல்ல : 9894499237



இணைப்புகள்


இணைப்புகள்

http://www.ulakaththamizh.org/JotsTags.aspx?word=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

http://rathinapughazhendi.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

http://aruramanathan.blogspot.com/

http://www.tamilvu.org/courses/diploma/a081/a0811/html/a0811214.htm

No comments:

Post a Comment