தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, March 3, 2011

எனக்கு வந்த கடிதங்கள் -1

தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் கடிதம் எழுதும் வழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது, பின்லாந்து நாட்டு ஆவணக்காப்பகங்களில் ஒரு உள்நாட்டுக் கடிதத்தைக் கூட ஆவணாமாகப் பாதுகாக்கின்றனராம். கடிதம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகியுள்ளது கடித இலக்கியம் என்று. எனக்கு வந்த கடிதங்களை இங்கே பதிவு செய்கிறேன். நாளை இதுவும் கூட ஆவணமாகலாம். முதலில் கவிஞர் அறிவுமதி எனக்கு எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாக பதிவுசெய்கிறேன்.

12/06/1991
சென்னை

அன்புயிர் புகழ்,
அண்ணன் மதி பேசுகிறேன்.
உனது அன்பின் மடல்களுக்கு உடன் மடலிட முடியாமைக்கு... பொறுத்தருள்க.
என்னிடமுள்ள குறைபாடே இதுதான். என் தொட்டில் பூமிக்கருகிலேயே இத்தகைய நம்பிக்கை வெளிச்சங்கள்
அறிமுகமாக அறிமுகமாக மனசு தெம்படைகிறது.
உனது மொழி உணர்வுகளும் அரசியல் உணர்வுகளும் செழுமையடையவும் வைரம் பாயவும் வாழ்த்துகிறேன்.
சுற்றிலும் நம்பிக்கையாளர்களைத் துளிர்விடச்செய். அண்ணன் ராசு அவர்களை அடிக்கடி சந்தி.புது நெல்லு புது நாத்து முடிந்து திரைக்குத் தயாராக இருக்கிறது.
விரைவில் சிதம்பரம் வரலாம். நான் ஊருக்கு வருகிற போது தெரிவிக்கிறேன் சந்திப்போம்.
அன்புடன் அண்ணன்
அறிவுமதி

குறிப்பு : அண்ணன் ராசு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது விருத்தாசலத்தில் வாழ்ந்த கொள்கையளரை.
திராவிட நாடு அடையும் வரைத் திருமணம் செய்துகொள்ளமாட்டோம் என்று பெரியாரிடம் குருதியால் ஒப்பமிட்டுக்கொடுத்தத்ற்காக் கடைசி வரை திருமணமே செய்தொகொள்ளாமல் மரணமடைந்தவர். சிந்தனைச்சிற்பி என எங்களால் அழைக்கப்பட்டவர்.


1 comment:

  1. கைப்பட கடிதம் இலக்கியம் தொலைந்து போனது வருந்ததக்கதே.

    ReplyDelete