தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, June 13, 2010

சிங்கப்பூர் சில குறிப்புகள்

சிங்கப்பூர் விமான நிலையம் அழகும் பிரமிப்பும் நிறைந்ததாகக் காட்சியளித்தது. விமான நிலையத்திலிருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஒரு விடுதிகுகுச்சென்றோம் செல்லும் வழியெங்கும் மரங்களும் புல் வெளிகளுமாக பச்சைப்பசேலென்ற காட்சி கண்ணுக்குக் குளிரூட்டியது. இரவு பெய்த மழையில் நகரமே குளித்து முடித்து புத்தம் புதிதாய் பளிச்சென காட்சியளித்தது. இயர்கையை அழகு செய் என்ற அறிவுமதி அண்ணனின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் கொடுத்தது போலிருந்தது. நண்பர் தியாக ரமேசு கூறியதுபோல் வாரம் மும்மாறி பொழியும் ஊராக சிங்கப்பூர் இருக்கிறது. வழியில் பார்த்த வானுயர்ந்த கட்டடங்களில் கூட தாவரங்களை வளர்த்துள்ளனர்.









விடுதிக்குச்சென்று காலைக்கடன்களை முடித்துக்கொண்டு கருத்தரங்கு நிகழுமிடத்திற்குச் சென்றோம். கருத்தரங்கில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, சிங்கப்பூர் பேராசிரியர்கள் முனைவர் தியாகராசன், முனைவர் வேல்முருகன், முனைவர் அரங்க.பாரி ஆகியோர் கலந்துகொண்டனர் பேராசிரியர் அபிதாசபாபதி தொடக்கவிழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மதிய உணவுக்குப்பிறகு நிகழ்ந்த முதல் அமர்வில் 'திருமுதுகுன்றம் கவிதைகள்' என்ற கட்டுரையை நான் வழங்கினேன்.
இரவு நண்பர்களுடன் முஸ்தபா சென்று அங்கு எந்த தளத்தில் என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்பதைப் பார்த்து வந்தோம் ஒரு சிலர் சில பொருள்களை வாங்கினர். முஸ்தபா கடையின் உரிமையாளர் ஒரு தமிழர் என்பதை அறிந்து மகிழ்ந்தோம். முதல் முறை நுழைபவர்களுக்கு சற்று குழப்பமாகத்தானிருக்கிறது பழகிய பிறகு இயல்பாகிவிடுகிறது. இரவு 11 மணிக்கு வில்லேஜ் விடுதிக்குத்திரும்பினோம். 24 மணி நேரமும் முஸ்தபா இயங்குகிறது. என் அறை தோழர் ஜெயசெல்வின் அறையில் இருந்தார் அவரை யாரென அறிந்துகொள்ள இயலாமல் மற்றொரு சாவி அட்டையையும் நானே எடுத்துச் சென்றுவிட்டேன் அதற்காக அவரிடம் வருத்தத்தைத் தெரிவித்தேன். வாங்கிக்கொள்ளாதது என் தவறுதான் என்று அவர் வருத்தம் தெரிவித்தது அவரின் பெருந்தன்மையைக் காட்டியது. மறு நாள் காலை (குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்ததனால்) நான் எடுத்துச்சென்ற தேங்காய் எண்ணெய் உறைந்து விட்டது. செல்வின் கிரீம் கொடுத்தார், வீட்டுக்குப் பேச கைபேசி கொடுத்து உதவினார். சில்லரை கிடைக்காமையால் பொது தொலைபேசியைப் பயன்படுத்து முடியாமல் அல்லல்பட்டேன். நண்பரின் உதவி பனைத்துணையாய் பயன்பட்டது.


நண்பர் தியாகரமேசுக்கும் தங்கவேல்முருகனுக்கும் நான் வந்த செய்தியைத் தெரிவித்தேன் மறுநாள் காலை என்னைச் சந்திப்பதாகக்கூறினர்.
இரண்டாம் நாள் நண்பர்கள் இருவரும் மிகுந்த அலைச்சலுக்குப் பிறகு கல்லூரியை வந்தடைந்தனர் பேராசிரியர் தியாகராஜன்தான் அவர்களுக்கு வழி கூறி உதவினார். மதிய உணவு விடுதியில் உண்டு முஸ்தபா சென்றோம் ஒரு வாடகைக் காரில். சில பொருள்களை வாங்கினோம் நண்பர்களும் சில பொரு:ள்களை அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்தனர். என்னை காரில் ஏற்றிவிட்டனர் இடம் தெரியாமல் அலைய வேண்டுமோ என அஞ்சிய படியே வந்தேன் நல்ல வேளை அப்படி நிகழவில்லை.
மூன்றாம் நாள் சிங்கப்பூர் சுற்றுலா. சந்தோசா தீவிற்கு சென்று அங்குள்ள கண்காட்சி, தண்ணீருக்கு உள்ளே உள்ள உலகத்தினை செயற்கையாக வடிவமைத்து வைத்துள்ளனர் பிரமிப்பாகத் தான் உள்ளது. டால்பின் விளையாட்டு மகிழ்ச்சியாக இருந்தது. தண்ணீரில் ஒளிக்காட்சிகள் (கடலின் பாடல்) ஆகியனவற்றைப் பார்த்தோம் சீனர்களின் சோயிலுக்குச் சென்றோம்.
மூன்றாம் நாள் இரவு மீண்டும் முஸ்தபா சென்று நள்ளிரவு மலேசியா புறப்பட்டோம்.

1 comment:

  1. பயண அனுபவம் நன்று..

    நிழற்படங்கள் அருமை...


    தமிழ் இயலன்

    ReplyDelete