tag:blogger.com,1999:blog-5500407508092305667.post441246945108902997..comments2023-11-03T03:09:41.389-07:00Comments on Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: சுழியான் சிறுகதைrathinapugazhendihttp://www.blogger.com/profile/04436726177716010574noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5500407508092305667.post-24038480940137559222013-12-16T04:41:44.549-08:002013-12-16T04:41:44.549-08:00ஐயா இன்றுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். மிக்க...ஐயா இன்றுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். மிக்க நன்றி இவ்வளவு நுட்பமாக பிழைகளைச்சுட்டியமைக்கு. தட்டச்சில் சில அவசரத்தில் சில என பல பிழைகள் வந்துவிடுகின்றன. த்விர்ப்பேன். மிக்க நன்றி.முனைவர் இரத்தின.புகழேந்திhttps://www.blogger.com/profile/15590601364446224697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5500407508092305667.post-20219820935579424212013-12-01T17:05:18.754-08:002013-12-01T17:05:18.754-08:00ஐயா, வணக்கம்!
கதை நன்றாயிருக்கிறது.
தாங்கள் ஒரு...ஐயா, வணக்கம்!<br /><br />கதை நன்றாயிருக்கிறது. <br /><br />தாங்கள் ஒரு இலக்கியவாதியாயிருப்பதால் தமிழை எழுதுவதில் பிழைநேராமலிருக்கவேண்டுமென்பதற்காக இந்தக்கதையிலிருந்தே சில பிழைகளை சுட்டிக்காட்டவிரும்புகிறேன். நான் காட்டவிருப்பவை புணர்ச்சியிலக்கணப்பிழைகளேயன்றி வேறில்லை!<br /><br />இக்காலத்தில் தமிழை கற்றோர்கூட புணர்ச்சிப்பிழையில்லாமலெழுதுவதில்லை. என்றாலும் நாம் அந்த பிழைகளை அறிந்து அவற்றை விலக்கியெழுதுவது நாம் எழுதும் தமிழை சிறப்பாக்குமன்றோ?<br /><br />சில எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும்:<br /><br />"நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு" <br /><br />'வழியவழிய' என்பது அடுக்குத்தொடர். இது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை பிரித்தெழுதலாகாது.<br /><br />"நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார்"<br /><br />'நுரைவரும்படி' என்பது எழுவாய்த்தொடர். இதை 'நுரை வரும்படி' என்று பிரித்துமெழுதலாம், தேவைப்பட்டால். <br /><br />தேவையென்றால், 'வரும்படி' என்பதை குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருந்தால் அங்கே அப்படி பிரிக்கலாம். இங்கே சேர்த்தெழுதுவதுதான் பொருந்தும்.<br /><br />'அலசி விடுவார்' என்பதையும் சேர்த்தெழுதியிருக்கலாம். சேர்த்தால் அது ஒரு வினையெச்சத்தொடர். முன்புசொன்னதுபோல் 'விடுவார்' என்பதை சிறப்பித்துச்சொல்லவேண்டுமானால், இப்படி இதையும் பிரித்தெழுதுவது பிழையன்று.<br /><br />'அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய்' <br /><br />'சொல்வதைக் காதில்' என்பதில் வலி மிகுந்ததால் புணர்ந்தது தெரிகிறது. புணர்த்தியபின் சொற்களை பிரித்தலாகாது!<br />'சொல்வதைக்' என்பதில் ஈற்றெழுத்தாயிருப்பது ஒரு வல்லினமெய். வல்லினமெய் தமிழ்ச்சொல்லுக்கு ஈற்றெழுத்தாயாகாதென்பது தொல்காப்பியருக்குமுன்பிருந்தேவுள்ளது.<br /><br />இதில் புணர்ந்ததே பிழைதான்! ஏனெனில், 'ஐ' என்னும் இரண்டாம்வேற்றுமையுருபின்முன் ஒரு வினைச்சொல்வந்துதான்புணரும். பெயர்ச்சொல்வந்தால் அது புணராமலேநிற்குமேயன்றி புணர்ந்துநிற்காது!<br /><br />'சுழியான் நாவில் நீர் சுரக்கச்செய்யும்'<br /><br />'நீர் சுரக்கச்செய்யும்'<br /><br />சொற்கள் இதில் புணராதிருப்பது பிழை.<br />இதுவும் இரண்டாம்வேற்றுமைப்புணர்ச்சிதான், ஆனால் இதில் உருபானது மறைந்துவந்தது. இப்படி மறைந்துவருவதை தொகைநிலையென்கிறது, இலக்கணம்.<br /><br />'நீர்சுரக்கச்செய்யும்' என்பதும் <br />'நீர் சுரக்கச்செய்யும்' என்பதும் ஒரேபொருளைத்தருவனவல்லவென்பதை எண்ணிப்பாருங்கள்!<br /><br />'மாடுபிடி!' என்றால், 'மாட்டைப்பிடி!' என்பது பொருள். இது இரண்டாம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடர்.<br /><br />'மாடு பிடி!' என்றால் பொருள் மாறிவிடும். ஒருவனை மாடென்றழைத்து பிடியென்றதாகும்!<br />(இடையில் காற்புள்ளியில்லையேயென்கிறார்கள். தமிழுக்கு புள்ளியேதேவையில்லையென்பது அவர்கள் அறியாதது.)<br /><br />புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவடையாமல் தமிழை பிழையின்றியெழுதுவது இயலாது.<br /><br />புணர்ச்சியை கற்போம், தமிழை காப்போம்!<br />Anonymoushttps://www.blogger.com/profile/01371096109334915163noreply@blogger.com