தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, September 7, 2009

வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா




வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா
ஆலத்தியூர் வித்யா மந்திர் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சிறப்புரையாற்ற அப்பள்ளித் தமிழாசிரியர் பூ.மணிவண்ணன் அழைத்திருந்தார்.தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் பேசும்படி குறிப்பிட்டனர் மாணவர்களுக்கேற்ப சற்று பேச்சில் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருந்தது. மாணவர்கள் சிறப்பாக கவனித்த விதம் மகிழ்ச்சியளித்தது.தமிழாசிரியர் வீரமணியின் வரவேற்புரை இலக்கிய நயத்தோடிருந்தது. மணிவண்ணன் மன்றத்தின் குறிக்கோள்களைக் கூறி என்னை அறிமுகப் படுத்தினார்.தாளாளரும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளருமான (நிர்வாகம்) திரு.மதன்மோகன் தலைமையுரையில் இனி வருங்காலங்களில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கென்று ஒரு நாள் ஒதுக்கி சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.பள்ளியின் முதல்வர் திருமதி இராதாரவீந்திரன் அவர்கள் பெண் எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பற்றி மாணவிகளிடம் வினவி தன் பள்ளிப் பருவ நாட்களை நினைவுகூர்ந்தார். ஓசூரில் பணியாற்றுகின்ற தோழர் மதியழகன் இன்று அறிமுகமானதோடு நிகழ்ச்சியிலும் பங்கேற்று இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடினார் அவரது வலைப்பக்கம் பற்றியும் கூறினார்.http://mathikavithaigal.blogspot.com/ பள்ளி நூலகத்தை முதல்வர், மணிவண்ணன், நூலகர் ஆகியோருடன் பார்த்தோம் ஒரு கல்லூரி நூலகத்தைப்போல் மாணவர்கள் அமர்ந்து படிக்கப் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.நல்ல பல நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்தபோது அரசு பள்ளிகளில் இது போன்று அமைக்க இயலவில்லையே என்னும் ஏக்கம் எழுந்தது.மரம், செடிகொடிகள், புல்வெளி என இற்கை எழில்கொஞ்சும் சூழலில் பள்ளி அமைந்திருப்பது சிறப்பம்சம்.

No comments:

Post a Comment